Showing posts with label வலைபாயுதே. Show all posts
Showing posts with label வலைபாயுதே. Show all posts

Wednesday, November 16, 2016

வலைபாயுதே

ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு 2,000 ரூபாய் கொடுத் தால், `இதுதான் ரெண்டாயிரம் ரூபாய் நோட்டா?’னு வாங்கிப் பார்த்துட்டு, `சரி காசைக் கொடுங்க’ன்றான்!



இந்தப் போர்களத்துலேயும் பெர்சனல் லோன் வாங்கிக்கச் சொல்லி செல்போனில் அழைப்பவர்களை என்ன சொல்வது? முன்வாசலில் அவ்வளவு கூட்டம் நிக்குது... பின்வாசல் வழியா கொடுப்பாங்களா?

ஒருத்தன் கேக்குறான்... `இன்னிக்கு 500, 1,000 ரூபாய்களை திருப்பதி உண்டியலில் போட்டா, அது பாவத்துல சேருமா... புண்ணியத்துல சேருமா?’ 

சுவிஸ் பேங்க்ல இருக்கிற கறுப்புப் பணத்தை மீட்கச் சொன்னா, சுருக்குப் பையில இருக்கிற பணத்தைப் புடுங்குறானுங்க!

நம்மாளுங்க 500 ஓவா நோட்டைக் கொடுத்தாலே அஞ்சாறு ஆங்கிள்ல பார்ப்பாங்க. இதுல 2,000 ஓவா நோட்டைக் கொடுத்தா இருபது ஆங்கிள்ல வெரிஃபை பண்ணுவாங்களே!

`கூட்டம் குறையட்டும் பேங்குக்குப் போலாம்’கிறது, `அலை ஓயட்டும் கடல்ல குளிக்கலாம்’ போல் ஆகிடும்னு நினைக்கிறேன் :)

என்கிட்ட இருக்கிற ரெண்டு மூணு 500 ரூபாய் நோட்டை அட்லாண்டா இந்து கோயில் உண்டியலில் போட்ருவேன். பெருமாள்: எனக்கே விபூதி அடிக்கப் பார்க்கிறல? 


நாம எல்லாரும் வருமானத்துக்கு அதிகமா கடன் வாங்குறவங்க!

பொங்கல்ல போட்ட முந்திரி, நம்ம தட்டுக்கு வரவே வராது. ஆனா, பிரியாணில் போட்ட ஒரே ஒரு ஏலக்காய் எப்பவுமே நம்ம வாய்க்குள்ளதான் மாட்டும்.
 
எதையாச்சும் சொல்லிட்டு கீழே `கலாம்'னு போட்டுட்டா நம்பிடறாய்ங்க.. :))

சாதாரண மொளகா வெடிக்கு, வண்டியை நிறுத்தி அது வெடிச்ச பிறகு வண்டியைக் கிளப்பிட்டுப் போறாங்க. இதையே சிக்னல்கள்ல ஏன்டா செய்ய மாட்றீங்க?

முட்டாளா இருக்க, அறிவு கம்மியா இருக்கணும்னு அவசியம் இல்லை; அதிக அன்பு காட்டினாக்கூட போதும்!

மகள்: பழிக்குப்பழின்னா என்னாப்பா?
நான்: நம்ம பலகாரத்தைப் பக்கத்து வீட்டுக்குக் கொடுக்கிறதும், பதிலுக்கு அவங்க பலகாரத்தை நமக்குக் கொடுக்கிறதும்தான்.

என் பாட்டி தீபாவளிக்கு மட்டும்தான் இட்லி சுடுவாங்களாம்; எங்க அம்மா தீபாவளி அன்னைக்கு மட்டும்தான் இட்லி சுட மாட்டாங்க! 

தொலைஞ்சுபோறதையே தொழிலா வெச்சிருக்கிற ஒரே பொருள்னா... அது பென்டிரைவ்தான்போல # மிடியல!