Sunday, April 3, 2016

வலைபாயுதே

அவ்வளவு செஞ்ச போதி தர்மராலேயே வழுக்கமண்டைக்கு மருந்து கண்டுபிடிக்க முடியல... ஸோ ஸேட்!

 இந்த `வெண்மதி வெண்மதியே நில்லு...' பாட்டைக் கேட்டாலே, 2 மி.மீ தாடி வளந்துருது!

 `மங்காத்தா'வுல வருவது மாதிரி ஏதாவது கன்டெய்னர் போகுதானு பார்த்துச் சொல்லுங்கப்பு. ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்!

‘வீடு வாங்கியிருக்கேன்’, ‘காரு வாங்கியிருக்கேன்’னு சொல்றாங்க. ஆக்சுவலி நீங்க எல்லாம் கடன் வாங்கியிருக்கீங்க மக்கா!

  கிரிஸ்கெயில் அடிக்கிற சிக்ஸருக்கு எல்லாம் தாராளமா எட்டு ரன்கள் தரலாம்!

ட்விட்டரை டி-ஆக்ட்டிவேட் பண்ணவே நமக்கு யோசனையா இருக்கு! நாட்ல எப்படி தற்கொலை எல்லாம் பண்றாங்க?

என்னை நானே கதறக்கதற அடிச்சு, மிதிச்சு, தரதரனு இழுத்துட்டுப்போறேன்... ஆபீஸுக்கு!

மூடநம்பிக்கைனு தெரிஞ்சாலும் யாராவது நமக்கு `கண்ணுபட்டுடும்'னு சொல்றப்ப குஷியா இருக்கு.

சொந்த தாய்மாமன் குடும்பம் நம்ம வீட்ல இருக்கும்போது, மத்தவங்ககிட்ட `கெஸ்ட் வந்திருக்காங்க’னு சொல்ற அளவுக்கு நம்ம சமூகம் வளர்ந்து நிக்குது.

நம்மூர்லதான்டா ஒன்வேயிலகூட ரெண்டு பக்கங்களும் பார்த்து கிராஸ் பண்ணவேண்டியிருக்கு.

சாராயம் வித்த அரசுக்கே இவ்வளவு கடன்னா... குடிச்ச மக்களுக்கு எவ்வளவு கடன் இருக்கும்?!

`இல்லை’ என்பதைவிட `இருந்தது’ என்பது வலிமிக்கது!

எல்லா பசங்களும் ‘சிங்கிள்’னு அழுவுறாங்க. எல்லா பொண்ணுங்களும் ‘committed’னு சொல்றாங்க. என்னடா நடக்குது இங்கே... ஒண்ணும் புரியலை. யாரு, யாரைத்தான் லவ் பண்றீங்க?

பெண்கள், ஸ்கூட்டியை வீட்டில் இருந்து வாசலுக்குக் கொண்டுவரும் அழகு இருக்கே... அட அட அட... குடிகாரன் தோத்துருவான்!

டாஸ்மாக் வாசலில் மல்லாந்து விழுந்துகிடப்பவனை `எந்திரி’ என்போம்; அம்மா காலடியில் குப்புற விழுந்துகிடப்பவனை `மந்திரி’ என்போம்!

பொண்டாட்டி அழறதைப் பார்த்தா புருஷனுக்குக் கோபம் வருது; புருஷன் சிரிக்கிறதைப் பார்த்தா பொண்டாட்டிக்குக் கோபம் வருது... #என்ன வாழ்க்கைடா!

வர்றவன் பூராம் லெக்பீஸாவே கேட்டா, `பூரான் பிரியாணி’ தான்டா செய்யணும்!

மக்கள் நலக் கூட்டனி

மக்கள் நலக் கூட்டனியை சுருக்கமாக மநகூ என்று சொன்னார்கள். இப்போது அது கேப்டன் நலக் கூட்டனியாகிவிட்டது. இனிமே எப்படி கூப்பிடுவார்கள்?????

தமிழ் நாடு முன்னேறனும்னா

தமிழ் நாடு முன்னேறனும்னா தி.மு.க ஆ.தி.மு.க வ ஒழிக்கறதுக்கு முன்னாடி இந்த விஜய் டீவிய ஒழிக்கனும்....